உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
- ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
- கைதானவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று கடங்கநேரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது அதில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த மகாராஜன்(வயது 18) என்பவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நெட்டூர் பஜனைமட தெருவை சேர்ந்த சுப்புக்குட்டி, முப்புடாதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.