உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-10-19 07:56 GMT   |   Update On 2023-10-19 07:56 GMT
  • சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துெ கொண்டார்.
  • அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ராஜ பாண்டலம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவருக்கும், மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துரைமுருகன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமி திடீரென தூக்க போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபலட்சுமி இறந்தார்.

இது குறித்து சுபலட்சுமி தாய் சித்ரா, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சித்ராவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என கள்ளக் குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News