உள்ளூர் செய்திகள்
- திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன நிலையில் கணவன் சண்முகத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் இருந்து வருகிறார்.
- விவாகரத்து கேட்டு பாலக்கோடு ஜே.எம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பி .ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் டிம்பிள் மனோ(27)
இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன நிலையில் கணவன் சண்முகத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு பாலக்கோடு ஜே.எம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மனவேதனையில் இருந்த டிம்பிள் மனோ நேற்று யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி சில வருடங்களிலேயே இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வழக்கை பர்கூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.