உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

Published On 2023-07-16 15:05 IST   |   Update On 2023-07-16 15:05:00 IST
  • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தலப்பள்ளி மாதன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது27). இவர் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தும் பணியை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News