உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஆண்டிபட்டி அருகே குடி பழக்கத்தால் வாலிபர் தற்கொலை

Published On 2022-11-07 10:40 IST   |   Update On 2022-11-07 10:40:00 IST
  • மது பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் அருந்தி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது44). கூலித்தொழிலாளியான இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சேதுராஜா மனைவி மாரியம்மாள் (39). இவர் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News