உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
- காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா மகன் கார்த்திக் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் வசித்து வந்த கார்த்திக் கடந்த 1 வாரமாக கள்ளிப்பட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.