உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-10-26 04:11 GMT   |   Update On 2022-10-26 04:11 GMT
  • தாத்தாவை பார்க்க சென்ற வாலிபரை உறவினர் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார்.
  • வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

வடமதுரை அருகே காணப்பாடி புதுபாளையத்தை சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் இவரது உறவினர் வாசுதேவன்(43) என்பவருக்கும் பூர்வீக ெசாத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தனது தாத்தாவை பார்க்க சென்ற நவீனை வாசுதேவன் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அய்யலூர் தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(33). சம்பவத்தன்று தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த ஹரிகரன்,அருண்குமார் ஆகியோர் சுரேசை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவரது பற்கள் உடைந்தது. படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அய்யலூர் அருகே மணியகாரன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(32). இவர் பொதுக்கழிப்பிடம் அருகே நின்றிருந்தபோது சிவக்கண்ணன், ரமேஷ், காளி, பரமன் ஆகியோர் மதுகுடித்து பாட்டிலை ரோட்டில் உடைத்தனர். இதை தட்டிகேட்ட மாரிமுத்துவை தாக்கி காயம் ஏற்படுத்தினர். இந்த 3 சம்பவங்கள் குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News