களக்காடு அருகே இளம்பெண் மகளுடன் மாயம்
- பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நேற்று வீட்டில் இருந்த பானுப்பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுப்பிரியா (வயது 23). இவரது கணவர் தர்மராஜா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலை யில் பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பானுப்பிரியா கணவரை விட்டு பிரிந்து சுப்பிரமணி யபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகளுடன் கடந்த 8 மாதமாக வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த பானுப் பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி பானுப்பிரியாவின் தாயார் சமுத்திரக்கனி (46) களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான பானுப் பிரியா மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.