- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் தீ வைத்து கொண்டார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறக்கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி ஜெபுருஷ் நிஷா (வயது 44). இவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த ஜெபுருஷ் நிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெபுருஷ் நிஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜெபுருஷ் நிஷாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜெபுருஷ் நிஷா சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் திட்டச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.