உள்ளூர் செய்திகள்

யோகா போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.


குற்றாலம் சாரல் விழாவில் யோகா போட்டி

Published On 2022-08-11 09:06 GMT   |   Update On 2022-08-11 09:06 GMT
  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் சாரல் திருவிழாவில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தை களுக்கான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார்.

மாணவி தீபிகா 2-மும் இடம் விஜயலட்சுமி 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உஷா, மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சார்ந்த மரியா, துணை முதல்வர் சவுந்தர்ராஜன், மருத்துவர் ராஜேஷ் விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் சுதா விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் ஸ்ரீராம் விரிவுரை யாளர் குழந்தை மருத்துவம் துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை, மருத்துவர் கலா, மருத்துவர் ஹரிஹரன் மற்றும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், யோகா தெரபிஸ்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News