உள்ளூர் செய்திகள்

ஏற்காடு அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா

Published On 2022-12-07 09:50 GMT   |   Update On 2022-12-07 09:50 GMT
  • வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும்.
  • அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருநாளான நேற்று காலை அண்ணா மலையா–ருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் பரணி தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்–பட்டது.

பின்னர் அங்குள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், ஏற்காடு அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஏற்காட்டில் உள்ள 67 மலை கிராம மக்களும் கலந்து கொண்டு அண்ணாமலை–யாரின் அருளை பெற்றனர். 

Tags:    

Similar News