உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2023-07-06 15:54 IST   |   Update On 2023-07-06 15:54:00 IST
  • இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
  • தேவேந்திரன் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

திருவாரூர்:

வலங்கைமானை அடுத்த வடக்கு பட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனபால்.

இவரது மகன் தேவேந்திரன்(வயது34). விவசாயி கூலித்தொழிலாளி.

இவரது மனைவி கிருஷ்ணவேனி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தி அடைந்த தேவேந்்திரன் நேற்றுமுன்தினம் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News