உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2022-06-15 09:13 GMT   |   Update On 2022-06-15 09:13 GMT
  • குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து தினந்தோறும் குடித்து வந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மருதுவாஞ்சேரி தெற்கு தெரு மாரியப்பன் மகன் கண்ணன் (வயது 42). இவர் திருமணமானவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து, தினந்தோறும் குடித்து வந்த நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் கண்ணனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News