உள்ளூர் செய்திகள்
- விஜயன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.
- அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் மூங்கில்பாடி அருகே உள்ள சேனைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 53). இவர் தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மினி டெம்போ வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் விஜயன் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.