உள்ளூர் செய்திகள்

கார்கள் மோதலில் தொழிலாளி பலி

Published On 2022-12-24 15:30 IST   |   Update On 2022-12-24 15:30:00 IST
  • தருமபுரியில் உள்ள ஒரு கோவிலுக்கு நேற்று காரில் சென்றனர்.
  • ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காவேரிப்பட்டணம்,

திருப்பத்தூர் மாவட்டம், கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரும், இவரது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21), கார்த்தி (21) ஆகியோருடன் தருமபுரியில் உள்ள ஒரு கோவிலுக்கு நேற்று காரில் சென்றனர்.

அதிகாலை 5 மணியளவில், எர்ரஹள்ளி அருகே கிருஷ்ணகிரி -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கிருஷ்ணகிரி நோக்கி வந்த மற்றொரு கார் சாலை தடுப்பை தாண்டி, எதிர்திசையில் ஜெகன் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார், கார்த்தி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ததனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News