உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு

Published On 2022-10-30 13:34 IST   |   Update On 2022-10-30 13:34:00 IST
  • சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளி
  • தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.

நெல்லை:

சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News