உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2022-11-21 09:14 GMT   |   Update On 2022-11-21 09:14 GMT
  • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி.
  • பவித்ரா பணத்தை எல்லாம் மது அருந்தவே செலவு செய்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என கண்டித்துள்ளார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன் (வயது35). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.

இதனால் அவர் வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தவே செலவு செய்துள்ளார். கடந்த 18-ந்தேதி போதையில் வீட்டிற்கு வந்த முருகன், மனைவி பவித்ராவிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பவித்ரா பணத்தை எல்லாம் மது அருந்தவே செலவு செய்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என கண்டித்துள்ளார்.

எனினும் முருகன் வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். அதன் பின்னர் சிதம்பரபுரம் வடக்கு கல்வாய் கரையில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகன் இறந்தார். இதுபற்றி அவரது தந்தை கனகராஜ் (65) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News