உள்ளூர் செய்திகள்

விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பெண்கள் ஞாயிறு நிகழ்ச்சி

Published On 2023-03-20 09:00 GMT   |   Update On 2023-03-20 09:00 GMT
  • பெண்கள் ஞாயிறு என்ற நிகழச்சியை மாஞ்சோலை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கொண்டாடினர்.
  • தொடர்ந்து 4 தேயிலை தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் பாடல், நாடகம், நடனம் உள்ளிட்டவற்றை செய்து அசத்தினர்.

கல்லிடைக்குறிச்சி:

மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட குடும்பத்தினர் உள்ளனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள 4 ஆலயங்களும் இணைந்து பெண்கள் ஞாயிறு என்ற நிகழச்சியை மாஞ்சோலை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ஜாய் ஜெமிலா பர்னபாஸ் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 4 தேயிலை தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் கர்த்தரின் பாடல், நாடகம், நடனம் உள்ளிட்ட வற்றை செய்து அசத்தினர். குறிப்பாக சிறுவர்கள் முதல் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கர்த்தரின் வரலாறு மற்றும் போதனைகளை பாடினர். தொடர்ந்து பெண்களுக்கான கயிறு இழுத்தல், கம்பு சுற்றுதல், வாயில் எலுமிச்சை பழத்தை வைத்து கொண்டு ஓடுதல் என ஏராளமான விளையாட்டுகளும் அரங்கேறியது. நிகழ்ச்சி யில் 4 தேயிலை தோட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News