சங்கரன்கோவிலில் ரூ.5 லட்சத்துடன் பெண் மாயம்
- சந்திராவை தனியாக வீட்டில் விட்டுவிட்டு குடும்பத்தினர் பாபநாசம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
- ரூ.3 லட்சத்து 10 ஆயிரம், வீட்டில் இருந்த சீட்டுபணம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பணத்துடன் சந்திரா மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தூசி மாடசாமி. இவரது மனைவி தெய்வானை (வயது 65).
மாயம்
இவர்களுக்கு சந்திரா (38) என்ற மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று தெய்வானை மற்றும் குடும்பத்தினர் சந்திராவை மட்டும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு பாபநாசம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதனால் சந்திராவுக்கு அவர்களது உறவினர் சாந்தி என்பவரிடம் சாப்பாடு கொடுக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளனர். அவர், வீட்டுக்கு சென்ற போது அங்கு சந்திரா இல்லாததால் தெய்வானைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ரூ.5 லட்சம்
தொடர்ந்து தெய்வானை வீட்டுக்கு வந்து தேடி பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 10 ஆயிரம், வீட்டில் இருந்த சீட்டுபணம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பணத்துடன் சந்திரா மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசல் அளித்த புகாரின் பேரில் போலீசார் பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.