உள்ளூர் செய்திகள்

நாரி சக்தி புரஸ்காா் விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-29 07:23 GMT   |   Update On 2022-09-29 07:23 GMT
  • 2022-ஆம் ஆண்டிற்கான ‘நாரி சக்தி புரஸ்காா் விருது’ உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாபி சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-ஆம் ஆண்டிற்கான 'நாரி சக்தி புரஸ்காா் விருது' உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், கல்வித் திறன் மேம்பாடு, வாழ்க்கைத்திறன் போன்ற பாரம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்த தனிநபரோ, குழுவாகவோ, அரசு சாரா அமைப்பு மற்றும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவர ங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News