உள்ளூர் செய்திகள்
குழந்தையின்மையை போக்குவதாக கூறி பண மோசடி... செயற்கை கருத்தரிப்பு மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
- குழந்தையின்மையை போக்குவதாக 4 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார்
- ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கும் பிரபல செயற்கை கருத்தரிப்பு மையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். குழந்தையின்மையை போக்குவதாக 4 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தற்போது தங்களுக்கு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லை என மருத்துவர்கள் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இது குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.