உள்ளூர் செய்திகள்

கார் மோதி பெண் படுகாயம்

Published On 2023-09-30 09:27 GMT   |   Update On 2023-09-30 09:27 GMT
  • அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
  • விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

அம்மாப்பேட்டை:

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் எடவாக்குடி 100 நாள் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சாலியமங்கலம்- பாபநாசம் நெடுஞ்சாலையில் களஞ்சேரி அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News