உள்ளூர் செய்திகள்

யானை மிதித்து பெண் காயம்

Published On 2023-04-03 09:58 GMT   |   Update On 2023-04-03 09:58 GMT
  • அந்த வழியாக 2 யானைகள் ஓடிவந்து வசந்தம் பின்னால் மோதி கீழே தள்ளியது.
  • யானைகள் வராமல் இருக்க வனத்துறை யினர் குழிகள் அமைத்து தரவேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாயி. இவரது மனைவி வசந்தம் (வயது 43).

யானை மிதித்து

இவர் இன்று அதிகாலை அவரது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அந்த வழியாக 2 யானைகள் ஓடிவந்து வசந்தம் பின்னால் மோதி கீழே தள்ளியது.

மேலும், அதில் ஒரு யானை வசந்தம் நெஞ்சின் மீது மிதித்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார்.

உடனே அக்கம்பக்க த்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பஞ்சப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த காயமடைந்த வசந்தத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

யானை மிதித்து படுகாய மடைந்த வசந்தத்தின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக அடர்ந்த வனப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வனத்துறை யினர் குழிகள் அமைத்து தரவேண்டும். யானைகளின் நடமாட்டத்தால் பயிர்களும் சேதமாகின்றன. எனவே, இருள் நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சோலார் விளக்குகளை பொருத்த வேண்டும்.

கடந்த ஒரு மாதங்களில் 4 யானைகள் இறந்துள்ளன. யானைகளால் பொதுமக்கள் இறப்பதை தடுப்பதற்கு அரசு சார்பிலும், வனத்துறை சார்பிலும் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடன் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் நகர் மன்ற தலைவர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News