உள்ளூர் செய்திகள்
தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்
ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம்அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தி லுள்ள அணைக்கரை அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில்மி கவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வருகின்றனர். காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் மண்டகப்படி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அப்போது ஒழுகச்சே ரியை சேர்ந்த புது தெரு சந்திரகாசு மனைவி சரஸ்வதி (வயது 50) என்ற பெண் தீ குண்டத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.