உள்ளூர் செய்திகள்
- வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்
- தெருவில் சுற்றி திரிந்த வெறி நாய் நாகம்மாவை கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே நமாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகம்மா (45) .
இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார் . அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறி நாய் நாகம்மாவை கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நாகம்மா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.