உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் பலி

Published On 2022-07-05 09:54 GMT   |   Update On 2022-07-05 09:54 GMT
  • மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
  • இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு லட்சுமி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (59). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜா திருப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னிக் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ராஜா சம்பவத்தன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். வண்டியை ராஜா ஓட்ட பின்னால் லதா அமர்ந்து வந்தார்.

சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே கோவை- சேலம் பைபாஸ் ரோடு அருகே வந்த போது லதாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. அதையடுத்து ராஜா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா கொண்டு சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலயின்றி லதா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News