உள்ளூர் செய்திகள்

ரெயிலில் மோதி பெண் சாவு

Published On 2023-03-02 10:05 GMT   |   Update On 2023-03-02 10:05 GMT
  • தஞ்சையில் ரெயில் மோதி பெண் பலியானார்.
  • ரெயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த குளிக்க ரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவண செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

ஆனால் இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊர்? என்று விபரம் தெரியவில்லை.இதை அடுத்து அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு அந்த பெண் இறந்தாரா ? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News