உள்ளூர் செய்திகள்
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
- சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய்
- தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர் ராயகிரி சாலையில் உள்ளார் தளவாய்புரத்திற்கு நடந்து செல்லும் போது வீராச்சாமி மடம் அருகே அடையாளம் தெரியாத அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சிவகிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகிறார்.