உள்ளூர் செய்திகள்

இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் கைது

Published On 2023-03-30 15:28 IST   |   Update On 2023-03-30 15:28:00 IST
  • மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.
  • இளம்பெ ண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஒசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இளம்பெ ண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஒசூர் முனீஸ்வர் நகர் பகுதியை ரதினா(எ) ரத்தினவேணி(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News