உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பழங்குடியின கிராமம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

Published On 2023-02-06 09:05 GMT   |   Update On 2023-02-06 09:05 GMT
  • காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
  • யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.

அரவேணு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளது.

இந்நிலையில் கோழிக்கரை பழங்குடியின கிராமம் வழியாக செல்லும் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களாக இந்தசாலையை ஓட்டிய தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது குடியிருப்பையொட்டிய பகுதிகளுக்குள்ளும் வந்து செல்கிறது.

இதனால் இந்த கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.

எனவே வனத்துறையினர் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்க்கொண்டு காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News