உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே மனைவியை கொன்ற கணவர் கைது
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- கடந்த 23-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சங்கர் பெரிய காட்டுப்பாக்கம் வந்தார்.
மாமல்லபுரம்:
செய்யூர் அடுத்த விளம்பூரை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது26). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஈஸ்வரி திருக்கழுகுன்றம் அடுத்த பெரிய காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சங்கர் பெரிய காட்டுப்பாக்கம் வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கரை தேடிவந்தனர்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.