வானூர் அருகே கணவன் இறந்த துக்கத்தில் கத்தியால் கழுத்தை அறுத்த மனைவி
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
- இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தை உள்ளான். இந்நிலையில் விவசாய கூலித்தொழிலாளியான அருள் 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ஜீவா அந்த துக்கத்தில் இருந்து விடுபடாமல் நாள்தோறும் சோகத்தில் இருந்து வந்தார். இதனால் சரியாக சாப்பிடாமலும், எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் இறந்த துக்கம் அதிகமாகவே நேற்று மனஉளைச்சலில் இருந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தார். கத்தியால் கழுத்தில் அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார்.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜீவாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி கத்தியால் கழுத்தை அறுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.