உள்ளூர் செய்திகள்

விளக்கு ஏற்றும் போது தீக்காயம் அடைந்த சிறுமி சாவு

Published On 2023-05-15 10:05 GMT   |   Update On 2023-05-15 10:05 GMT
  • சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன்.
  • பூஜை அறையில் விளக்கு ஏற்றினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 27-ந் தேதி சாதனா வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது அவரது பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலைமையில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News