உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கிய முதியவரின் கதி என்ன?

Published On 2023-07-31 15:07 IST   |   Update On 2023-07-31 15:07:00 IST
  • தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
  • இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.

இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News