உள்ளூர் செய்திகள்

ஊட்டிக்கு சுற்றுலா சென்றஎன்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி

Published On 2022-12-29 09:18 GMT   |   Update On 2022-12-29 09:18 GMT
  • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கோவை,

திருப்பூரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது கல்லூரியில் படிக்கும் சவுரிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீஹரி (வயது 19) என்பவருடன் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா செல்வது என முடிவு செய்தார். அதன்படி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டிச் சென்றார்.

மோட்டார் சைக்கிள் காளப்பட்டி நால் ரோடு சந்திப்பில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஸ்ரீஹரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News