உள்ளூர் செய்திகள்

பீடம்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்

Published On 2023-09-28 09:25 GMT   |   Update On 2023-09-28 09:25 GMT
கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

சூலூர்,

பீடம் பள்ளி பகுதியில் குடிநீர் தேவைக்காக கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

இதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதியை சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி ஒதுக்கீடு செய்தார்.

இந்த கீழ்நிலை தொட்டிக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதோடு கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியை பீடம் பள்ளி மயானம் செல்லும் பாதையை தார் சாலையாக மாற்ற ஒதுக்கீடு செய்துள்ளார் அதற்கான துவக்க பணிகள் இதொடக்க நிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், பீடம் பள்ளி ஊராட்சித் தலைவர் குமரவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குட்டியப்பன், இடம் பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News