உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கிய காட்சி. அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் பலர் உள்ளனர்.

தருவையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-03-11 08:49 GMT   |   Update On 2023-03-11 08:49 GMT
  • பொதுக்கூட்டத்திற்கு தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நெல்லை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பெரிய பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ராஜேந்திரன், முத்துப்பாண்டி, ஒன்றிய, நகர செய லாளர்கள், நிர்வாகிகள், பேச்சாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் செய்திருந்தார்.

Tags:    

Similar News