உள்ளூர் செய்திகள்
பசுவந்தனையில் 72 பேருக்கு நலத்திட்ட உதவி
- பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
- முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன.
புதியம்புத்தூர்:
பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன 72 பேருக்கு 2.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பசுவந்தனை பஜாரில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.