உள்ளூர் செய்திகள்

மினி சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2022-08-18 09:24 GMT   |   Update On 2022-08-18 09:24 GMT
  • ராஜபாளையம் அருகே மினி சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
  • இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ஆசிலாபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மனைவி நாகஜோதியுடன் முறம்பு பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள மெயின் ரோட்டை இருவரும் கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து கணவன்-மனைவி மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரியப்பனின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்ைச பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். நாகஜோதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி சரக்கு லாரி டிரைவர் தென்காசி கடையநல்லூரை சேர்ந்த யோவானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் சக்கரராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அட்டைமில் முக்கு ரோட்டில் சென்ற போது எதிரே வந்த மொபட் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

மொபட்டில் வந்த அய்யனார்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News