உள்ளூர் செய்திகள்

பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டு

Published On 2022-08-19 14:34 IST   |   Update On 2022-08-19 15:24:00 IST
  • பஸ்-ஆட்டோவில் சென்ற பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள் (வயது 65). இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ராஜபாளையத்தில் இருந்து மம்சாபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டான். இதுபற்றி ரெங்கம்மாள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக மடவார் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (76). இவர் பஸ்சில் இருந்து இறங்கியதும், 3 பெண்கள் ஆட்டோவில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து முத்தம்மாள் அவர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டது தெரியவந்தது. இதுபற்றி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News