உள்ளூர் செய்திகள்

பெண் தொழிலாளி-மாணவன் மாயம்

Published On 2022-08-03 09:01 GMT   |   Update On 2022-08-03 09:01 GMT
  • மதுரை அருகே பெண் தொழிலாளி-மாணவன் மாயமானார்கள்.
  • 2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பச்சிபட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மகள் கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மதன்குமார் (வயது 14). 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார்.

2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News