உள்ளூர் செய்திகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70.57 கோடியில் புதிய கட்டிடம்

Published On 2022-09-13 13:26 IST   |   Update On 2022-09-13 13:26:00 IST
  • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70.57 கோடியில் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
  • அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த கட்டிடம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

இதில், அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News