உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2022-07-15 09:11 GMT   |   Update On 2022-07-15 09:11 GMT
  • தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
  • விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள மாத்திநாயக்கன்பட்டிரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அய்யம்மாள் ராணி (வயது 51). இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கிக்கு அய்யம்மாள் ராணி வந்தார். அங்கு பணியை முடித்துவிட்டு சூலக்கரை ஐ.டி. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

ஆள் நடமாட்டம் பகுதி வந்தபோது மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அய்யம்மாள் ராணி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News