உள்ளூர் செய்திகள்

சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்.

சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி: ராஜபாளையத்தில் வரவேற்பு

Published On 2022-08-05 09:55 GMT   |   Update On 2022-08-05 09:55 GMT
  • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
  • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

Tags:    

Similar News