உள்ளூர் செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் மாயம்

Published On 2022-08-19 08:55 GMT   |   Update On 2022-08-19 08:55 GMT
  • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செல்லையாபுரத்தைச் சேர்ந்தவவர் ராமர். இவரது மகள் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மில்லில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி ராமர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் சத்யா. இவரது மகளுக்கு வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார். இதுபற்றி சத்யா ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ைண தேடி வருகின்றனர்.

விருதுநகர் நியூ ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமாகி விட்டார். இதுபற்றி கவிதா விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News