உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர்-தொழிலாளி பலி

Published On 2023-08-19 08:56 GMT   |   Update On 2023-08-19 08:56 GMT
  • வாகனம் மோதி வாலிபர்-தொழிலாளி பலியாகினர்.
  • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சுழி

திருச்சுழி அருகே உள்ள டி.கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது46), விறகு வெட்டும் தொழிலாளி. இவர் மகளை பார்ப்பதற்காக நரிக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மணிக்கட்டியேந்தல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஷேர்ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முத்துபாண்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஷேர்ஆட்டோ டிரைவர் பரமக்குடி பிடாரிசேரியை சேர்ந்த பெரிய சாமி (43) மீது வழக்குப்பதிவு செய்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள புளியம்பட்டி மகாராஜாபுரத்தை சேர்ந்த வர் கிருஷ்ண பிரசாத் (வயது34). மதுரை-தூத்துக்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொகண்டிருந்தார். கள்குறிச்சி பகுதியில் ஓட்டல் ஒன்றின் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த டிப்பர் லாரி திடீரென திரும்பி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து கிருஷ்ண பிரசாத் படுகாயம் அடைந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கிருஷ்ண பிரசாத்தின் சகோ தரர் பாபு கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கி ணறு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News