உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2023-04-15 13:41 IST   |   Update On 2023-04-15 13:41:00 IST
  • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
  • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பலமுறை வீட்டை விட்டு வெளியே சென்று 2, 3 நாட்களில் திரும்பி வந்து விடுவாராம்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா மலையின் பின்புறம் உள்ள முனியாண்டி கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாதா ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News