உள்ளூர் செய்திகள்

மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-01 07:50 GMT   |   Update On 2022-11-01 08:05 GMT
  • மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவி னைப்பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து க்குள் இருப்பின், ஆண் 5 சதவீதம், பெண் 4சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

கடன் பெற இணைக்க ப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3.

கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர் மாவட்டம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News