உள்ளூர் செய்திகள்

தொழிலாளி-வாலிபர் தற்கொலை

Published On 2023-08-10 07:10 GMT   |   Update On 2023-08-10 07:10 GMT
  • விருதுநகர் அருகே தொழிலாளி, வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • தற்கொலைக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சு ஓடைப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது78). 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகாததால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). திருமணமானவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சஞ்சய் குமாரின் தாய் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News