உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published On 2023-07-02 14:09 IST   |   Update On 2023-07-02 14:09:00 IST
  • விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
  • இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சின்னவாடியில் பணிபுரிந்த சின்ன மூப்பன் பட்டிக்கும், பெரிய பேராளி ராம்கார்த்திக்ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் சிவகுமார் அல்லம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்பையநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் ரோசல்பட்டிக்கும், சிவஞானபுரம் பாண்டிய ராஜன் விருதுநகருக்கும், புளியங்குளம் அருணகிரி கோட்டைபட்டிக்கும், ஏ.புதுப்பட்டி விவேக் கூரைக்குண்டுவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூரைக்குண்டுவில் பணியாற்றிய கருப்பசாமி ஏ.புதுப்பட்டிக்கும், கோட்டையூர் உமா கணேசன் பெரியபேராளிக்கும், விருதுநகர் ராஜூ அப்பையநாயக்கன் பட்டிக்கும், ரோசல்பட்டி சந்திரசேகர் கோட்டையூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டி ராஜ லட்சுமி சின்னவாடிக்கும், சின்ன மூப்பன்பட்டி செல்வி சிவஞான புரத்துக்கும் என 14 கிராம நிர்வாக அதிகாரிகள் விருதுநகர் தாலுகா அளவில் இட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News